CM Siddaramaiah has said that he does not want zero traffic restrictions

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர்சித்தராமையாமற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் கடந்த சனிக்கிழமை அன்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

Advertisment

முதல்வர்சித்தராமையாதலைமையிலானஅரசு பதவியேற்றஉன்னையேபெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளைநிறைவேற்றிஅமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அரசாணைவெளியிடப்பட்டுஅமலுக்கு வரவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் முதல்வர்சித்தராமையாவிருந்தினர்கள்,கட்சிக்காரர்கள்எனதன்னை பார்க்கவரும் அனைவரும் பொன்னாடை, சால்வைகள்,பூங்கொத்துஉள்ளிட்டவைஎதுவும் கொடுக்க வேண்டாம்.அதற்குப்பதிலாகப்புத்தகங்களைப்பரிசளித்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அளிக்கப்படும் ஜீரோடிராஃபிக் சலுகைகளை திரும்பப்பெறுமாறுபோக்குவரத்துபோலீசாருக்குசித்தராமையாஉத்தரவிட்டுள்ளார்.ஜீரோ ட்ராஃபிக்கட்டுப்பாடுகள்விதிக்கப்படும் சாலைகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப்பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.