Advertisment

போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி...!

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

cm-palanisamy-polio-drops-day

இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
admk cm palanisamy polio drops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe