Skip to main content

சேலம் விரைந்த முதல்வர்; கடும் கட்டுப்பாடுகள் அமல்!

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

CM MK Stalin in salem to inspect

 

அனைத்து துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் கள ஆய்வு செய்வதற்காக,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப். 15, 2023) தனி விமானத்தில் சேலம் வந்தார். அங்கு இரண்டு நாட்கள் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தி வரும் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளனவா? அவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், குறைகள் குறித்து ஆய்வு செய்ய கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

 

முதல் கட்டமாக பிப். 1 மற்றும் 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் ஆய்வு நடத்தினார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, சேலம் மண்டலத்தில் பிப். 15, 16 ஆகிய இரு நாட்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை (பிப். 15) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சேலம் வந்தார். புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினருடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு, நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடுகிறார். இவ்விரு கூட்டங்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடக்கிறது.

 

இதையடுத்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 4.30 மணிக்கு அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், துறை செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் சேலம் மண்டலத்தில் நடந்து வரும் மற்றும் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆய்வு மாளிகையில் இரவு உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்கிறார். மறுநாள் (பிப். 16) காலை 9.30 மணியளவில் மீண்டும் அனைத்து துறை செயலர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதிய உணவுக்குப் பிறகு தனி விமானத்தில் சென்னைக்கு கிளம்புகிறார். 

 

இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், சேலம் மாநகராட்சி ஆணையர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் துறை செயலர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வருகையையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கள ஆய்வு நடக்கும் அறைக்குள் செல்ல ஊடகத் துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களுக்குத் தேவையான செய்தி அறிக்கைகள், படங்கள், காணொளி காட்சிகள் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

மேலும், மாவட்டம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் எழாத வகையில் காவல்துறை கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.  கள ஆய்வுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பால் பண்ணை, உழவர் சந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் என எங்கேயாவது திடீரென்று நேரடி ஆய்வுக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற நேரடி ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளிட்டோரும் உடன் வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல்வர் எந்த இடத்திற்கு நேரில் ஆய்வுக்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பதற்றமும் அரசு அலுவலர்கள் தரப்பில் தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கேற்ப அனைத்து துறை பணியாளர்கள், ஆசிரியர்களையும் முதல்வர் ஆய்வு நடக்கும் இரண்டு நாட்களிலும் பணியில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.