ADVERTISEMENT
சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 10.30 மணி அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, கீதா ஜீவன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மணல் சிற்பத்தை மெரினா கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments