கலைஞர் நினைவுநாளில் புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் (படங்கள்)

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகலிங்க மரக்கன்றை நட்டு தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடுநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

chief minister kalaignar trees
இதையும் படியுங்கள்
Subscribe