ADVERTISEMENT

கரோனா தடுப்பு பணி - 17ம் தேதி முதல் முதல்வர் மாவட்டங்களில் ஆய்வு!

05:57 PM Aug 15, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் என கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 17ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திலும், 20ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும், 21ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு நடத்த உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT