Advertisment

’உன்னால் நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே...’முதல்வர் - ஆளுநர் விவகாரம்:துரைமுருகன் கமெண்ட்

du

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில், ’’பேரவையில் குட்கா ஊழல் தொடர்பான ஆதாரத்தை காட்டியபோது கேலி செய்தனர். ஆனால் அந்த வழக்கு தற்போது சிபிஐ வரை சென்றுள்ளது. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதால்தான் சிபிஐ விசாரணைக்கு மற்றப்பட்டது’’என்று கூறினார்.

Advertisment

அவர் மேலும், ‘’ துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான லஞ்சப்பணம் கை மாறியது என்று ஆளுநர் இப்போது சொல்கிறார்.

Advertisment

அண்ணா பல்கலைக்கு வேறு மாநிலத்தவரை நியமனம் செய்தார். இதை திமுக எதிர்த்தது. அதன் பின்னர் அம்பேத்கார் பல்கலைக்கு இப்பத்தான் வெளியில் இருந்து ஒருவரை நியமனம் செய்தார். அதை எதிர்த்தபோதும் சொல்லவில்லை. அந்த சமயத்தில் என்னையும் தளபதியையும் அழைத்து உட்கார வைத்து, காபி கொடுத்து, ஆளுநர் பேசும்போது துணைவேந்தர்களின் தகுதியைத்தான் கூறினார். தகுதியான நபர்கள்தான் என்று ஆதாரங்களை காட்டி துணைவேந்தர்கள் நியமத்தை நியாயப்படுத்தினார். ஆனால், அப்போது அவர் துணைவேந்தர்கள் நியமனத்தில் லஞ்சம் கை மாறியதாக கூறவில்லை. இப்போதாவது கூறுகிறாரே உறுதியாக இருக்கிறாரே என்று நினைத்தால், அவர் பல்டி அடித்துவிட்டார். நான் அப்படிச்சொல்லவில்லை, அப்போது சொல்லவில்லை என்று மாற்றி மாற்றி பேசுகிறார். ஆளுநர் நிலையாக இல்லை.

முதலமைச்சர் மீது ஒரு வழக்கு, டிஜிபி மேல் ஒரு வழக்கு, முன்னாள் தலைமைச்செயலாளர் மீது ஒரு வழக்கு, ஆளுநர் மீது அப்படி இப்படின்னு.... ஆகையினால் உன்னால நான் கெட்டேன் என்னால் நீ கெட்டே என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சர்க்கார்’’என்று கூறினார்.

duraimurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe