Skip to main content

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

CM consults with all District Collectors!

 

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தப் பொதுமுடக்கம் வரும் ஜனவரி 31ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும் எடுக்கப்பட்ட கரோனா நடவடிக்கைகள் குறித்தும் இன்று (29.01.2021) 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் வரை பொதுமுடக்கத்தை நீட்டித்திருக்கும் நிலையில் தமிழகத்திலும் அதே நிலை தொடருமா எனவும் இன்று முடிவெடுக்கப்படும்.

 

அதேபோல் இன்று மாலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.  

 

சார்ந்த செய்திகள்