Advertisment

பாராலிம்பிக்ஸ்; பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!

n

Advertisment

பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரமாண்டமாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வரும் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இன்று காலையில் ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தது. தேவேந்திரா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். வட்டு எறிதல் போட்டியில் யோகேஸ் கதுன்யா வெள்ளிப்பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவனி லெகரா தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில், பதக்கம் வென்றவர்களைமுதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

அதில், " அவனி லெகரா படைத்துள்ள பெரும் சாதனைகளால் நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அதைபோன்று ஈட்டி ஏறிதல் மற்றும் வட்டு ஏறிதல்போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe