Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்குத் தலைவாழை விருந்து! நிவாரணப் பொருட்கள் வழங்கி ஊக்குவிப்பு!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 

Cuddalore

 

 

 

 

இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். நாடுமுழுவதும் தினம் தோறும் தூய்மைப் பணியாளர்களை, கவுரவிக்கும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
 

 

Cuddalore

 

அதன் ஒரு பகுதியாகக் கடலூர் சிறகுகள் குழு சார்பில் இரவு பகல் பாராது பணியாற்றக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ துவக்கி வைத்து தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, ஊரடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி விளக்கினார். 
 

Cuddalore


கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்குப் பொருட்களை வழங்கினார்.
 

மேலும் கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள தினசரி கூலித்தொழில் மேற்கொள்ளும் கொத்தனார்கள், பந்தல் அமைப்பாளர்கள் மற்றும் வறுமை நிலையில் இருந்த குடும்பத்தினருக்கு தினசரி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட கெமிக்கல்-மாதவன் என்பவர் மூலம் கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
 

Cuddalore


 

http://onelink.to/nknapp


இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி கலந்து கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார். நிகழ்வில் ஒவ்வொருவரும் சரியான சமூக  இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் பொருட்களை பெற்றுக் கொண்டனர். 
 

இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுமா, தலைவாழை இலை போட்டு தாய் உள்ளத்தோடு உணவு பரிமாறினார். தூய்மைப் பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

பேரூராட்சியில் உள்ள பணியாளர்கள் காலையில் வேலையை முடித்து அலுவலகத்தில் வந்து உணவு அருந்தும் விதமாகத் தினம் தோறும் மதியம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுகள் ஏற்பாடு செய்யபட்டு, அவர்கள் உணவு அருந்தும் விதமாக இருக்கைகள் போடப்பட்டு உணவு கொடுக்கப்படுகிறது. தமது மேல் அதிகாரி தங்களுக்கு உணவு பரிமாறி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.