இன்று காலை அரியலூரில் தமிழக கவர்னர் முன்னிலையில் மீனாட்சி இராமசாமி கல்லூரி மாணவர்கள் 30 பேர் இரத்ததானம் செய்தனர். மேலும் 500 மீனாட்சி இராமசாமி கல்லூரி மாணவ மாணவியர்கள் தமிழக கவர்னர் தலைமையில் பாரத பிரதமர் அவர்களின் "தூய்மை இந்தியா" கருத்துக்களை வலியுறுத்தி காமராஜர் திடலில் துவங்கி பேருந்து நிலையம் வரை பேரணி ஊர்வலமும் நடைபெற்றது.