Skip to main content

இனி வாரத்தில் 6 நாட்கள் பல்கலை, கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும்! உயர்கல்வித்துறை உத்தரவு!!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Classes are now held 6 days a week at universities and colleges! Higher Education Order !!

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, இனி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் வாரத்தில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவியதால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

தற்போது இந்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வாரம் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தற்போதைய செமஸ்டருக்கான வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் நேரடியாக நடத்த வேண்டும். ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. 

 

எனவே, செமஸ்டர் தேர்வுகள், இறுதித் தேர்வுகளுக்கு முன்பாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக பாடத்திட்டங்களை வழங்க வேண்டும். பாடத்திட்டங்களின்படி பாடங்களை நடத்தி முடித்த கல்லூரிகளில் திரும்பவும் வகுப்புகள் நடத்த வேண்டும். 

 

குறிப்பாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தியிருந்தால் திரும்பவும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக்கல்வி இயக்குநர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். கல்லூரிகள், வாரத்தில் 6 நாட்கள் நடக்கிறதா என்றும், ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளனரா என்றும் கண்காணிக்க வேண்டும். 

 

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுகள் குறித்தும் ஏற்கனவே உள்ள தேதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் உறுதிசெய்துகொள்வதுடன், மாற்றம் செய்யப்பட்ட அட்டவணையை அனுப்பிவைக்க வேண்டும். 

 

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மேற்சொன்ன உத்தரவின்படி செயல்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்." இவ்வாறு உயர்கல்வித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.