Skip to main content

கோவில் திருவிழாவில் அரிவாள் வெட்டு; கோஷ்டி மோதலில் தவிக்கும் கிராமம்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Clash of function at temple festival near Jayankondam

 

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய தாலுக்கா பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முந்திரி காடுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வனத்துறை அதிகாரிகள் முந்திரி காடுகளை ஏலம் விடுவார்கள். அதை முந்திரி வனக்காடுகளை ஒட்டி உள்ள கிராம முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக ஏலம் எடுப்பார்கள். ஏலம் எடுத்த காடுகளில் காய்க்கும் முந்திரி கொட்டைகளை கூலிக்கு ஆட்களை வைத்துப் பொறுக்கி சேகரித்து பிறகு அதை மொத்தமாக விற்று அதில் கிடைக்கும் பணத்தை ஏலம் எடுத்த ஊர் முக்கியஸ்தர்கள் பங்கிட்டு கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறும்.

 

அதன்படி ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கு தோண்டி கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் முந்திரி காடுகளை ஏலம் எடுப்பதற்கு முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சகோதரர் சகாதேவன் தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு வனத்துறை முந்திரிக் காடுகளை ஏலம் எடுத்துள்ளார். இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் அனைவரையும் கலந்து பேசி ஏலம் எடுக்காமல் சகாதேவன் மட்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏலம் எடுத்தது முக்கியஸ்தர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே அந்த ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், சாமி ஊர்வலம் வந்துள்ளது.

 

அப்போது காசிநாதன் வீட்டிற்கு சாமி வரும்போது, அங்கு நிறுத்தி தீபாராதனை காட்டாமல் சாமி காசிநாதர் வீட்டை கடந்து சென்றுள்ளது. இதை பார்த்த காசிநாதன் ஏன் எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு சாமி ஊர்வலம் கடந்து செல்ல வேண்டும் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் காசிநாதன் தரப்புக்கும் கமலக்கண்ணன் தரப்புக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காசிநாதன் மீது அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த மோதலில் சுமார் ஐந்து பேர் காயமடைந்து அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருக்கும் காசிநாதன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த கமலக்கண்ணன், தேவேந்திரன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

அதேபோல் கமலக்கண்ணன், கலைவாணன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் காசிநாதன், சகாதேவன், சரசு ஜெயசீலன், விஜயா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருதரப்பு புகாரின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஊர் மக்களின் ஒரு பகுதியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காசிநாதன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் தான் திருவிழாவில் வேண்டும் என்று தகராறு செய்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்று வாக்குவாதம் செய்தனர். டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆமணக்கந்தோண்டி கிராம மக்களிடம் எச்சரித்தனர். “சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை சும்மா இருக்காது; தன் கடமையை செய்யும்” என்று கூறிய காவல்துறையினர் இது சம்பந்தமாக ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.