Skip to main content

ரவுடிகள் இடையே மோதல்; 4 பேர் கைது!

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Clash between rowdies; 4 arrested!

 

சேலம், அழகாபுரம் பெரிய புதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). ரவுடி. இவரும், இவருடைய நண்பரான மிட்டாபுதூரைச் சேர்ந்த பாஸ்கர் (27) என்பவரும், ஆக. 5ம் தேதி இரவு, பெரிய புதூர் சுடுகாடு பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மதுபோதை அதிகமான நிலையில், அவர்களுக்குள் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. விஜயகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்நிலையில், அதே பெண்ணுடன் பாஸ்கரும் ரகசியமாக தொடர்பு வைத்திருந்துள்ளார். அடிக்கடி அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். 

 

இதையறிந்த விஜயகுமார், சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில், தான் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணிடம் நீ ஏன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறாய்? எனக்கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை தலையில் வெட்டியுள்ளார். 

 

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த விஜயகுமாரின் கூட்டாளிகள் 5 பேர், பாஸ்கரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கை, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார், பாஸ்கர் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அழகாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் காந்திமதி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

 

விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் பாஸ்கரின் தம்பி அஜித்குமார் (22), ஆனந்த் (29) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாஸ்கர் தரப்பு அளித்த புகாரின் பேரில் விஜயகுமார், அவருடைய கூட்டாளி அஜீத்குமார் (26) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 


கைதான நான்கு பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம உத்தரவின் பேரில், அவர்கள் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.