citizenship amendment bill 2019 dmk party mk stalin speech

Advertisment

சென்னையில் நடைபெற்ற அண்ணாவின் அறிவுக்கொடை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது. அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். அண்ணா இருந்த காலத்தை விட தற்போது தமிழர்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிட்டார்கள். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கூட்டணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" . இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.