Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது!

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய புகாரின் பேரில் நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர் 


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

citizenship amendment act nellai district kannan speech police arrested

நெல்லை கண்ணன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நெல்லைக் கண்ணனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில்,  பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லைக் கண்ணன் மீது நெல்லை காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது 504, 505(1), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

citizenship amendment act nellai district kannan speech police arrested


இந்த நிலையில் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் 50- க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர் பின்னர் விடுவித்தனர். 

citizenship amendment act nellai district kannan speech police arrested

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய புகாரின் பேரில் நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறையினர், நெல்லைக்கு  அழைத்து செல்லப்பட்டதாக தகவல் கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டில் 18 ஆண்டுகள் வேலை செய்த பலே கில்லாடி கைது

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 

Bale Gilladi, who worked abroad for 18 years with a fake passport, was arrested!



போலி கடவுச்சீட்டு மூலமாக சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வேலை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர், வடக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது 43). இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருவதாகவும் அதற்கான கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக கடவுச்சீட்டு வழங்கல் அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய தணிக்கை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், வீரகனூர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். 

 

அதன் பேரில் வீரகனூர் எஸ்.ஐ. தினேஷ்குமார் வீரமுத்துவின் வீட்டிற்குச் சென்று தணிக்கை செய்துள்ளார். அப்போது வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை என்பதும் அவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. வீரமுத்துவின் பெயரில் அவருடைய உறவினரான உள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் போலியாகக் கடவுச்சீட்டு எடுத்து சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. 

 

ஆள்மாறாட்டம் செய்து போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் எஸ்.ஐ. தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் போலி கடவுச்சீட்டு, போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார். 

 

ராஜேஷ் எப்போது தமிழகம் திரும்பினாலும் அவரைக் கைது செய்ய காத்திருந்த காவல்துறையினர் சென்னை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் தேடுதல் அறிவிக்கை (லுக் அவுட்) வழங்கி இருந்தனர். காவல்துறையினர் வலை விரித்துக் காத்திருப்பதை அறியாத ராஜேஷ், நவ. 13 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் காவலர்கள் குழு திருச்சி சென்று ராஜேஷை கைது செய்தனர். அவரை சேலம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

கடந்த 2002 ஆம் ஆண்டு, வடக்கு ராமநாதபுரத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த உறவினரான வீரமுத்துவின் ரேஷன் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை திருடிய ராஜேஷ் அதன்மூலமாக போலி கடவுச்சீட்டு பெற்றுள்ளார். அப்போது ராஜேஷுக்கு 18 வயது நிறைவடையாததால் வீரமுத்துவின் பெயரிலேயே போலியாக கடவுச்சீட்டு பெற்று சிங்கப்பூருக்கு பறந்துள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அவருடைய கடவுச்சீட்டின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டது. அதைப் புதுப்பிக்க முயன்ற போதுதான் காவல்துறையில் வசமாக சிக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான ராஜேஷை சேலம் மாவட்ட 6-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரின் உத்தரவின்பேரில் ராஜேஷை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

 

 

Next Story

"தமிழ் கடல்" நெல்லை கண்ணன் உடல் தகனம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

k;l

 

நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மை கொண்ட பேச்சாளர். வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் நெல்லை கண்ணன் என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர்.

 

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.