Skip to main content

மிஷ்கினுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்...!!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
 Mani Ratnam gave a sock to Mishkin ... !!

 

இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பிசாசு'. இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பில் பிசாசு 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதேபோல் இன்று இயக்குனர் மிஸ்கினின் பிறந்தநாளும் கூட, இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்து இயக்குனர் மிஷ்கினுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த விருந்தை இயக்குனர் மணிரத்னம் முன்னின்று வழங்க, இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி என முக்கிய இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.

 

 Mani Ratnam gave a sock to Mishkin ... !!


தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கும் நிலையில், இந்த சந்திப்பில் தமிழ் சினிமாவின் நகர்வுகள், முக்கிய நிலைகள் குறித்து பேசப்படாமலா இருந்திருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“எனக்கு தெரிந்த ஒரே கட்சி என் தங்கச்சிதான்...” - நடிகர் பாலா

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
 actor Bala said that I have no intention of joining politics

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைந்து, குடியாத்தம் பிரீமியர் கிரிக்கெட் லீக் (GPCL) என்ற அமைப்பை தொடங்கி, இதில் 12 அணிகள் சேர்க்கப்பட்டு சுமார் 200 இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று கடந்த மூன்று மாதங்களாக 75 போட்டிகள் நடைபெற்றது. 

இதனையடுத்து இறுதிப் போட்டி  நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் கே.பி.ஒய் பாலா செய்தியாளரிடம் பேசியபோது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்தவற்றை உதவி செய்தேன். மற்றவர்கள் உதவி செய்யவில்லை எனக் கூறும் தகுதி எனக்கு இல்லை.

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை, எனக்கு எந்த கட்சியும் தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே கட்சி எனது தங்கச்சி எனக் கூறியவர். எனக்கு பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட தெரியாது. நான் எங்க இருந்து பொலிட்டிக்களில் வருவேன் என்றார்.