Skip to main content

சினிமா பாணியில் நள்ளிரவில் ஒரு ஊரே சூறையாடல்... போலீசார் குவிப்பு

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

A cinema-style midnight robbery ... police concentration

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்பதில் ஏற்பட்ட தகராறில் பலருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அருகே உள்ள கந்தப்பக்கோட்டை பகுதிக்கு நேற்று காலை மினி வேனில் மீன்விற்க சென்றுள்ளனர். அப்பொழுது கந்தப்பகோட்டையை சேர்ந்த இரண்டு வாலிபர்களுடன் மீன் விற்க சென்ற மூவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மைநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கந்தப்பகோட்டையை சேர்ந்த இரண்டு வாலிபர்களின் தரப்பு பள்ளப்பட்டியில் மீன் விற்பனை செய்தவர்களின் மினிவேனை அவர்களது ஊருக்கே சென்று இரவில் அடித்து நொறுக்கியுள்ளனர்.

 

A cinema-style midnight robbery ... police concentration

 

இதனால் ஆத்திரமடைந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மீன் விற்ற நபர்கள், அடியாட்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோருடன் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மூன்று வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதோடு, கால்நடைகளும் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தகவலறிந்து போலீசார் அதிகப்படியாக அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா பாணியில் நள்ளிரவில் ஒரு ஊரே சூறையாடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.