Skip to main content

சினிமா போல் அரசியல் இல்லை...ரஜினி, கமலை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கார்த்தி சிதம்பரம்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

சினிமா போல் அரசியல் இல்லை என நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் வருகை குறித்து கார்த்தி ப சிதம்பரம் டுவிட்டரில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.
 

டுவிட்டர் பதிவிலோ.,"நடிகர்கள்  கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியலில் இருந்து அப்பாற்பட்டு, சமுகத்தை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சினிமா வசனங்களை போல் ஒரு வரியில் கருத்து சொல்வதை தவிர்த்து விட்டு ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அவர்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும். 

cinema not compare to politics actors rajini and kamal hassan sivagangai mp karthi chidambaram tweet


 

உதாரனமாக, GST,பணமதிப்பு இழப்பு, மதச்சார்பின்மை கொள்கை, அரசே டாஸ்மாக்கை நடத்துவது, தனியார்மயம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அவர்கள் இருவருடைய கருத்துக்கள் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். 
 

cinema not compare to politics actors rajini and kamal hassan sivagangai mp karthi chidambaram tweet



தமிழ்நாட்டிற்கு ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேலோட்டமாக இருக்கும் நடிகர்கள் அரசியலில் தேவை இல்லை. அரசியலும், அரசை நிர்வகிப்பதும் எளிதான காரியம் இல்லை. அவர்களிடம் மாற்று அரசியல் சார்ந்த கொள்கைகள் இருந்தால் அதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்." என பதிவிடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்துடன் நீண்ட நெடுங்காலமாக நட்பில் இருக்கும் ரஜினிகாந்தை கார்த்தி விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.