பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். அதிமுக கட்சியில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர். 2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானார் என்று கூறப்படுகிறது.
அதே போல் நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கும் அன்புச்செழியன் தான் காரணம் என்று கூறினர்.
ADVERTISEMENT
அதே போல் நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கும் அன்புச்செழியன் தான் காரணம் என்று கூறினர்.
ADVERTISEMENT
இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை தி. நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Show comments