பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்.
இவரது உடல் அவரின் நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொதுமக்கள் அஞசலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமுத்திரகனி, மனோபாலா, உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் அ.தி.மு.க அமைச்சர் ஜெயகுமார், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும்நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமான பொதுமக்களும் பாடகர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞசலி செலுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-1.jpg)