கிறிஸ்தவ சமூக மக்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகிறார்கள்.

Advertisment

christian feast day

அதன் தொடர் நிகழ்வாக இன்று ஈரோட்டில் சத்திரோடு சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ சமூகத்தினர் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு வந்து, அந்த கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து, மலர்வளையம் வைத்தும், மெழுகு வர்த்தி ஏந்தி, ஜெபப் புத்தகத்தை படித்து, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

Advertisment

இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் தமிழகம் முழுக்க உள்ள கிருஸ்துவர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கல்லறைதோட்டத்திற்கு சென்று மலர் வலையம் வைத்து பிராத்தனை செய்தனர்.