Skip to main content

''சித்ரா நிலை எனக்கும் வரக்கூடாது'' - சின்னத்திரை நடிகை கமிஷ்னரிடம் புகார்!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

'' Chitra situation should not come to me '' -  actress complains to Commissioner

 

சென்னை மணலி வலிஜாபாளையத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜெனிஃபர், 'செம்பருத்தி' தொடரின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெனிஃபருக்கு இரண்டு ஆண்டுக்கு முன் சரவணன் என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

 

இந்நிலையில், துணை இயக்குனரான நவீன்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், இரு வீட்டாரும் ஜெனிஃபரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அது முடிந்த பின் திருமணம் செய்வதாக முடிவெடுத்தனர்.

 

கடந்த மாதம் சின்னத்திரை நடிகை ஜெனிஃபர் மற்றும் நவீன்குமார் பல இடங்களில் காதலர்களாகச் சுற்றி வந்தனர். கடந்த மாதம் பாண்டிச்சேரி சென்றிருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெனிஃபர் நவீன்குமாரிடம் சரியாகப் பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் வளசரவாக்கத்தில் படப்பிடிப்புக் குழுவில் இருந்த ஜெனிஃபரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, போரூர் வழியாக கூடுவாஞ்சேரி, வண்டலூர் வழியாக சிங்கப்பெருமாள் கோவில் வரை அழைத்துச் சென்று, ஜெனிஃபரை தாக்கி, நிர்வாணப்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து, இந்த விசயத்தை வெளியே சொன்னால் சின்னத்திரை நடிகை சித்ராவின் கதிதான் உனக்கும் நடக்கும் என்று மிரட்டியுள்ளார்.

 

'' Chitra situation should not come to me '' -  actress complains to Commissioner

 

இந்நிலையில் சின்னத்திரை நடிகை ஜெனிஃபரிடம் நவீன்குமார் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். நவீன்குமாரை ஜெனிஃபர் தவிர்த்து வந்த நிலையில், நவீன்குமார் ரவுடிகளை அழைத்துவந்து ஜெனிஃபர் குடும்பத்தாரையும், ஜெனிஃபரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கியுள்ளார்.

 

இதில், ஜெனிஃபர் மற்றும் அவரது தாயார், தந்தை, தங்கை, சகோதரர் ஆகியோரை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெனிஃபர் குடும்பத்தார் கேட்டபோது, நவீன்குமாரின் தந்தை உதயகுமார் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டி வந்ததாகத் தெரிய வருகிறது.

 

இதனால், சின்னத்திரை நடிகை ஜெனிஃபர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மகேஷ்குமார் அகர்வாலை நேரில் சந்தித்து, நவீன்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சின்னத்திரை நடிகை ஜெனிஃபர், ''சித்ரா நிலைமை எனக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இன்று புகார் கொடுத்துள்ளேன். ஒரு நிர்பயா கேஸுக்காக இவ்வளவு தூரம் போராடும் நீங்கள் ஏன் இதற்கு நிற்க மாட்டேங்குறீங்க. என்னிடம் இரண்டு லட்சம் வாங்கியிருப்பார்கள். எனக்கு நீதி வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை சித்ரா வழக்கில் தந்தை எடுத்த திடீர் முடிவு 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

 A sudden decision taken by actress Chitra's father

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Next Story

கலர்ஸ் தமிழில் புதிதாக 2 தொடர்கள்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

Colors Tamil New 2 Serials

 

திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி  உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ரசிகர்ளை மகிழ்விக்கும் விதமாக தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தொடர்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்குவித்தல், கொண்டாட வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஸ்டீரியோடைப் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், முற்போக்கு எண்ணம் கொண்ட நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தல், சமகால நிகழ்ச்சிகளை நடத்துவதில் கலர்ஸ் தமிழ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் இரண்டு சீரியல்களை அறிமுகப்படுத்துகிறது

 

விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2, மற்றும் அர்ச்சனைப் பூக்கள் என்ற இரு சகோதரிகளின் கதை ஆகிய இரண்டு தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த இரண்டும் கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்புகளும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன.