Skip to main content

தந்தை பெரியாரை அவமதித்த தெருச்சண்டை புகழ் வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு? -ப.சிதம்பரம்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ்  -  தி.மு.க வேட்பாளரான தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக ப.சிதம்பரம் எம்.பி. பொதுக் கூட்டங்கள் நடத்தி வாக்கு சேகரித்து வருகிறார். 

 

இந்த நிலையில் கீரமங்கலத்தில் மெய்யநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசும் போது.. 

 

 

இந்திராகாந்தி காலத்தில் இருந்து தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள் 6 முறை கூட்டணி அமைத்து மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் நீங்கள் விரும்பினால் அந்த வெற்றியை பெறமுடியும். 

 

chithamparam election campaign in keeramangkalam

 

இந்தி பேசும் சில மாநிலங்களில் இருந்து பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டு இந்தி வெறியர்களான ஆர்.எஸ்.எஸ்சின் பிள்ளை பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. மீண்டும் இந்தியை திணிப்பை கொண்டு வர முயன்று முதலில் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்கிறது. சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு பூஜை செய்ய தான் போகலாம். இந்தியை எதிர்த்து நம் தமிழர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். மறுபடியும் கொண்டுவர முடியுமா?

 

 

இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க வில் நின்று வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா, அவர் பெயரோ முகமோ உங்களுக்கு தெரியுமா? ஆனால் இந்த முறை காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் யார் நிற்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. கார்த்தி சிதம்பரம் தான் வெட்பாளர். அவரை எதிர்த்து யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும்.

 

அதில் ஒருவர் தெருச்சண்டை புகழ் வேட்பாளர் ஒருவர் ( எச்.ராஜா) தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும், செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தெருச்சண்டை புகழ் வேட்பாளரை ஆதரிப்பீர்களா, ஓட்டுப் போடுவீர்களா? 

 

இந்தியாவின் முதல் பயங்கரவாதி கோட்சே.. முதல் பலி மகாத்மாகாந்தி. அந்த பயங்கரவாதி ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தவன். அந்த இயக்கத்தின் பிள்ளை தான் பா.ஜ.க. அந்த பிள்ளையை தான் தமிநாட்டில் பல்லக்கில் தூக்கி சுமக்கிறார்கள் அ.தி.மு.க எடப்பாடியும், ஒ.பி.எஸ்ஸும் . 

 

 

பணமதிப்பிழப்பினால் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் முடங்கிவிட்டது. 50 ஆயிரம் பேர் வேலை இழந்துவிட்டார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் சொன்னார். அப்படி இத்தனை இழப்புகளை கொடுத்த பா.ஜ.க வுடன் கூட்டணி. 

 

 

கஜா புயல் வந்து ஒன்றரை கோடி தென்னை மரங்களும் மற்றும் பல மரங்களும், வீடுகளும், 89 பேரும் இறந்தார்கள். மோடி ஒரு இரங்கல் கூட சொல்லவில்லை. ஆனால் இப்ப ஓட்டுக்காக வந்து கொண்டே இருக்கிறார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு என்னை தலைவராக நியமித்தார்கள். விவசாய கடன் ரத்து, மாதம் 6 ஆயிரம், கல்விக் கடன் என்று அறிக்கை தயாரித்தோம். 6 ஆயிரம் கொடுக்க முடியாது என்று பா.ஜ.க சொல்கிறது. முடியாது தான். அவர்களால் செய்ய முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் முடியும் செய்ய முடிந்ததை மட்டும் தான் சொல்வோம். 11 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய கடன் ரத்து என்றோம் செய்தோம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக சொன்னார்கள் செஞசார்களா? அதை கேட்டால் பதில் சொல்ல கூட மாட்டார்கள்.

 

 

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டார்கள் பா.ஜ.க வுக்கு 0 என்று தமிழ்நாடு வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 40 பேரையும் அனுப்புங்கள் உங்களுக்கான திட்டங்களை கொண்டு வருவார்கள் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

'எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் மோடி' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Which face is Modi coming with'- CM Stalin's lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரை ரிங் ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''சு.வெங்கடேசனையும், கார்த்தி சிதம்பரத்தையும் மீண்டும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்.

இன்னும் ஒரே வரியில் சொன்னால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மாதிரி நிச்சயம் இருக்க மாட்டார். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி இப்பொழுது வாக்கு கேட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தால் தவிச்சாங்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தாரா? இல்லை. எந்த முகத்தோடு மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற எல்லா மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வாங்கக்கூட உச்சநீதிமன்றத்திற்கு போகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். மோடி கர்நாடகா வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த ரெண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லி சாலையில் போராடுகின்ற அவலநிலையை உருவாக்கி இருக்கிறார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதேநிலைமைதான். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தார். ஆளுங்கட்சியை உடைத்து இப்பொழுது அந்த மாநிலத்தையும் நாசமாக்கி விட்டார்கள். அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரை கைது செய்துள்ளார். டெல்லி, பஞ்சாபிலும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் இ.டி, ஐ.டி, சிபிஐ, மற்றும் கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா'' என்றார்.