Skip to main content

’சின்னத்தம்பி பிரபு’ அவர் ரொம்ப நல்லதம்பி: ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
uhtyakumar


டிடிவி தினகரன் தரப்பு மூளைச்சலவை செய்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவிரிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு இன்று காலை டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் சரிவர செயல்பட முடியவில்லை. எம்.எல்.ஏ. பணிகளை செய்ய மாவட்டத்தில் முட்டுக்கட்டை போடப்படுகிறது அதனால் டிடிவி தினகரனுக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,

ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் யாரும் சிக்கவில்லை.

பிரபு என்ற சின்னத்தம்பி, அவர் ரொம்ப நல்லத்தம்பி. அவர் மக்கள் பணியில் சில கோரிக்கைகளை வைத்தார், அதை முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தற்போது அந்த மூளைச்சலவையில் ஒவ்வொருவருக்காக வலைவிரித்து பார்க்கிறார்கள். ஆனால், இந்த உண்மை தெரிந்து விரைவில் அனைவரும், தம்பி பிரபுவும் எங்களோடு வந்துவிடுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.