சர்வதேச அளவிலான வாழைக் கருத்தரங்கம் மற்றும் வாழைக் கண்காட்சி, வரும், 22ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது.

 Chinese scientists banned from coming to Trichy

Advertisment

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில் சர்வதேச அளவிலான, 300க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

இந்த கருத்தரங்கில், தெற்கு சீனாவில் இருந்து, 4 விஞ்ஞானிகள் பங்கேற்று, தங்கள் நாட்டின் வாழை ரகங்கள், சாகுபடி முறை, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், மேலாண்மை குறித்தெல்லாம் விளக்கமளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அவர்களுடைய வருகை தடைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடைய விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment