childrens incident police investigation arrested two persons

Advertisment

மதுரையில் கரோனாவால் மாணிக்கம் என்ற குழந்தை இறந்ததாக போலி மயான ரசீது காண்பித்து புதைத்ததாகப் பெற்றோரிடம் நாடகமாடி அந்த குழந்தையை விற்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து, இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் 2 குழந்தைகள் விற்கப்பட்டது தெரியவர, காவல்துறையினர் காப்பகத்திற்க்கு சீல் வைத்து தரகராக ஈடுபட்டவர்கள் மற்றும் குழந்தையை வாங்கியவர்கள் என 7 பேரை கைது செய்தனர்.

மேலும் இதன் முக்கிய குற்றவாளிகளான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர்சிவகுமார் மற்றும் உதவியாளர்மதார்ஷா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் இன்று (03/07/2021) கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.