Skip to main content

காவல்நிலையத்தில், குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம்...! - காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள் 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

At the police station, a children's entertainment hall

 

திருப்பத்தூர் மாவட்டம் காவல்நிலையத்தில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் கலந்துகொண்டு குழந்தைகளுக்கான மனமகிழ் கூடத்தைக் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஒரு சிறுமியைக் கொண்டு மனமகிழ் மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

 

நிகழ்வில் பேசிய எஸ்.பி. விஜயகுமார், “குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க வரும் பெண்கள் சில நேரங்களில் குழந்தைகளுடன் காவல் நிலையத்துக்கு வரும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. விசாரணையின்போது குழந்தைகள் அச்சப்படுகின்றன. இதனால் காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் நடைபெறும் விசாரணைகளைக் கண்டு அச்சப்படாமல் இருக்க குழந்தைகள் மனமகிழ் கூடம் என்கிற அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

 

At the police station, a children's entertainment hall

 

காவல்நிலையத்தில், ஒரு அறையில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் நிலவும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல் சிறுவர்கள் படிப்பதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை பாதுகாப்பான அறையாக இருக்க வேண்டும் என காவல்நிலைய அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.சுபாஷினி, எஸ்.ஆர்.டி.பி.எஸ் இயக்குனர் ஆர்.தமிழரசி, சைல்ட் லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவிந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆய்வாளர் பிரேமா நன்றி கூறினார்.

 

காவல்நிலையத்தில் இப்படியொரு அறை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்திய அதிகாரிகளுக்குப் பொதுநல அமைப்புகள் பலவும் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘வண்டில என்ன கம்ப்ளைண்ட்?, வண்டியே கம்ப்ளைன்ட் தான்!’- அரசு பேருந்து ஓட்டுநரின் புலம்பல் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Govt bus driver video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் வர வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் ஆத்திரமடைந்த  பயணி இத்தனை நாளா பஸ் கீழே வந்துச்சு இப்ப ஏன் கீழ வரல வண்டில என்ன கம்பிளைன்ட்? என கேட்க வண்டியே கம்பளைண்ட் தான் என்று ஓட்டுநர் கூறும் விதம் வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி  சென்னை - பெங்களூர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் செல்வதால், சர்வீஸ் சாலையில் பேருந்துகள் வந்து செல்லாமல் இருந்தது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 40 அடி உயரம் மேலே ஏறி சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சமீபத்தில் சர்வீஸ் சாலை அமைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வந்தது.

Govt bus driver video goes viral

சர்வீஸ் சாலை வழியாக செல்லும்போது பேருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக செல்லக்கூடிய நிலை இருப்பதால் ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் வழியாகவே பேருந்தை இயக்கி செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் ஏரி வர சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏறி பேருந்து கீழே வராமல் ஏன் மேலே செல்கிறீர்கள்? பேருந்தில் என்ன கம்பளைண்ட் என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து, “வண்டியே கம்ப்ளைன்ட் தான் என்கிட்ட கேட்டு என்ன பண்றது. நானே இதை வச்சு ஓட்டிட்டு இருக்கிறேன் போய் அதிகாரிகளை கேளுங்க...” என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.