Children who ate sandwiches were admitted to the hospital!

திருவண்ணாமலையில் பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இதேபோல் கேன்டீனில் சான்ட்விச் வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் மூவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ராணிப்பேட்டை அருகே தனியார் கேன்டீன் ஒன்றில் மூன்று சிறுவர்கள் சான்ட்விச் சாப்பிட்ட நிலையில் மூவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மூவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். இந்நிலையில் சிறுவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் நலம் விசாரித்த தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மூவரையும்உயர் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.