Skip to main content

வாணியம்பாடியில் காணாமல் போன சிறுவர்கள்! சென்னை ரயில்வே போலிஸார் மீட்பு

Published on 12/08/2018 | Edited on 12/08/2018

 

ch


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவேந்தர். அவருடைய 13 வயது மகன் லோகேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மகன் 13 வயது ஆகாஷ்.


இரண்டு பேரும் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் உள்ள ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்கிற தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அம்பூர்பேட்டை பகுதியில் ஒரு ஆசிரியையிடம் தினசரி டியுஷன் படித்து வருகின்றனர்.


நேற்று ( ஆகஸ்ட் 11ந்தேதி ) பள்ளிக்கு விடுமுறை என்பதால் டியூசனில் மூன்று வேளை ஆசிரியை பாடம் நடத்தியுள்ளார். காலை இரண்டு முறை டியுஷன் சென்று படித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர் இரண்டு மாணவர்களும். மீண்டும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் டியூசன் வகுப்பிற்கு சென்றுள்ளனர்.


6 மணிக்கு அவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து அந்த ஆசிரியையின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இரண்டு மாணவர்களும் சாப்பிட செல்வதாக கூறி மாலை 3 மணிக்கே சென்றுவிட்டதாக அந்த ஆசிரியை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அனைத்து பகுதிகளிலும் தேடினர். அதோடு, அந்த மாணவர்களின் நண்பர்களின் வீடுகளிலும் தேடியும் எங்கும் இல்லை.


இதனால் இரவு 8 மணிக்கு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவர்களை தேடத்துவங்கினர். அந்த மாணவர்கள் சென்னைக்கு இரயில் ஏறி சென்றுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியவர்கள் அங்குள்ள கூட்டத்தை கண்டு மிரண்டுபோய்வுள்ளனர்.


இரயில்வே போலிஸார் அவர்களிடம் விசாரித்தபோது, வீட்டை விட்டு ஓடிவந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களிடம் முகரியை வாங்கியவர்கள் வாணியம்பாடி போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை கேள்விப்பட்டதும், போலிஸார், இன்று ஆகஸ்ட் 12ந்தேதி இரண்டு மாணவர்களின் பெற்றோர்களோடு சென்னைக்கு விரைந்து சென்று மாணவர்களை மீட்டு வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.