Skip to main content

திருச்சி குழந்தைகள் அரசு தற்காலிக விடுதியில் மாயமாகும் சிறுமிகள் !

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

திருச்சியில் சமீபக்காலமாக பெண் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் காணாமல் போவதும், குழந்தைகள் கடத்தப்படுவதும், வன்கொடுமை செய்யப்படுவதுமாய் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படும் பெற்றோரை விட்டு வெளியே வரும் பெண் குழந்தைகளே பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த ஓராண்டுகளில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் பலர் ஏதோ ஒரு வகையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள், இதில் ஊடகம் மூலம் வெளிவருபவை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் வெளியே வராமல் இருப்பது இன்னும் அதிகம்.

 

children missing in  Trichy government temporary hostel


மத்திய அரசு - மாநில அரசு இரண்டும் பெண்களை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்போம் என ஒரு புறம் கூறிக்கொண்டு மாவட்டந்தோறும் பல பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகளும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நல அமைப்பு என மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூக நல துறை, குழந்தைகள் நல குழுமம், சைல்டுலைன் (1098), காவல்துறையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்கள் பாதுக்காப்பு பிரிவு, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு சார்பில் குழந்தைகளுக்கான பாதுக்காக்கும் கடமையில் பணியாற்றி வருகின்றனர்.

குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்பற்ற நிலையில் வரும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு பாதுகாப்பு அளிக்கும் முக்கிய அதிகாரிகள் செயல்படுகின்றனர். மேலும் இதுப்போன்ற நிலைமைகளில் வரும் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்பு நலன் கருதி அரசு ஏற்று நடத்தும் விடுதியில் தங்க வைப்பது வழக்கம், அப்படி விடுதிக்கு செல்லும் சிறுமிகளுக்கு சரியான உணவும், உடையும், மேலும் பற்பல பாதுகாப்பு வசதிகள் வழங்கவேண்டியது அவ்விடுதியின் கடமையாகும்

சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வீ.என்.நகர் இருக்கும் டி.எம்.எஸ்.எஸ்.எஸ் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விடுதியில் இருந்து சிறுமிகள் சிலர் அங்கிருந்து தொடர்ச்சியாக தப்பித்து செல்வது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நாம் விசாரிக்கையில்,

children missing in  Trichy government temporary hostel


கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி திருச்சி ரயில் நிலையம் வந்தார். அவரை ரயில்நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மீட்டு விசாரிக்கையில் குடும்ப பிரச்சனையால் ஓடி வந்தாக சொல்கிறார். இந்த குழந்தை தற்காலிக விடுதி டி.எம்.எஸ்.எஸ்.எஸ் சொந்தத்தில் அதன்படி சிறுமி விடுதியில் தங்க வைக்கிறார்கள். இரண்டு நாள் இருந்து வந்த நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து 2 சிறுமிகள் தப்பியோடிவிட்டனர்.

அதில் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு சென்ற நிலையில் தோகைமலையை சேர்ந்த சிறுமியை பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை, இதுக்குறித்து காப்பக கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

இதுக்குறித்து போலீசார் விசாரிக்கையில் விடுதியில் உள்ள மாணவிகள் ரொம்ப நாளாகவே சாப்பாடு சரியில்லாமல் அவதிபட்டுக்கொண்டிருந்ததாகவும், மதியம் சமைக்கும் உணவையே இரவு, மறுநாள் காலை வரை பயன்படுத்துவதாகவும், இதனால் உள்ளே உள்ள சிறுமிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிகிறது. இதனால் சிலர் விடுதியை விட்டு ஓடி போகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3 சிறுமிகள் தொடர்ந்து தப்பித்துள்ளது. விசாரணையில் தெரிந்துள்ளது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய குழந்தைகள் விடுதி அதிகாரிகளான மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி முறையாக விடுதியை ஆய்வு செய்வதில்லை என்றும், குழந்தைகள் நல குழும தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதனை கண்டும் காணாதவாறு இருந்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மாதிரியான வீட்டை விட்டு வரும் பெண் குழந்தைகளை பாதுக்க வேண்டிய இந்த விடுதிகளில் இப்படி அலட்சியமாகவும், தரமற்ற உணவு கொடுக்காமல் வெளியேறிவதும், பிறகு சில நாட்கள் கழித்து சிக்குவதும், மீண்டும் அதே விடுதியில் சேர்ப்பது என்பது தொடர்ந்து கொண்டிருப்பது குழந்தை உரிமை விசயமாக பார்க்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.