சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோசிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். அத்துடன், 21 பேருக்கான தண்டனை விவரங்கள் வரும் செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேரில் ஒருவர் இறந்த நிலையில், 2 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர். ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.