Skip to main content

முன்விரோதத்தில் சிறுவன் கொலை; தாய், மகன்கள் அதிரடி

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

 

children incident mother and her sons police arrested salem central prison

 

பர்கூர் அருகே, முன்விரோதம் காரணமாக சிறுவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தாய், இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எலத்தகிரி ராம் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் பாலேப்பள்ளி ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் முருகேசன் (வயது 17).  

 

இவர், 9- ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்க விரும்பாததால் வீட்டில் இருந்து வந்தார். முருகேசனின் தாயார் மங்கம்மாள், தன் தந்தையுடன் கோபித்துக் கொண்டு 7 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. 

 

தனது தாய்க்கும் தந்தைக்கும் சண்டை ஏற்பட்டு, தாய் பிரிந்து செல்வதற்கு எதிர் வீட்டில் வசிக்கும் டெம்போ ஓட்டுநரான பிரபு (வயது 27) என்பவரும், அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம் என முருகேசன் கருதினார்.  

 

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபுவின் தந்தை  ராஜா இறந்தார். அதற்கு 
முருகேசன் குடும்பத்தினர்தான் காரணம் என பிரபு குடும்பத்தினர் கருதினர். இதனால் இரு 
குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.  

 

இந்தநிலையில் ஆக. 17- ஆம் தேதி இரவு, ராம் நகரில் சாலையில் முருகேசன் நடந்து சென்று  கொண்டிருந்தபோது பிரபு வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் அவர்  நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தணியாத பிரபு, அவர் மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.  

 

இதையறிந்த பிரபுவின் அண்ணன் திருப்பதி (வயது 32), தாயார் பொட்டு அம்மாள் (வயது 55) ஆகியோர் சடலத்தை அருகில் உள்ள வயல்வெளியில் தூக்கி வீசிவிட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக பிரபு மற்றும் அவருடைய அண்ணன், தாயார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், பிரபுவையும், திருப்பதியையும் சேலம் மத்திய சிறையிலும், தாயாரை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.