திரைப்பட துணை நடிகர்நாச்சியப்பன்உள்ளிட்ட இருவருக்கு பாலியல் குற்றம் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம்,சோழவந்தானைச்சேர்ந்த துணை நடிகரான பக்தன் என்கிறநாச்சியப்பன்என்பவர், கடந்த 2017- ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த மணிகண்டன் என்பவரும் அதே சிறுமிக்கு பாலியல்சொந்தரவுக்கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக, கிடைத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதுசோழவந்தான்காவல்துறையினர்போக்ஸோசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,அவர்களைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்டபோக்ஸோசிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாலும், இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், துணை நடிகரானநாச்சியப்பன்எலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.