Skip to main content

குட்டையில் மிதந்த குழந்தைகள்... கதறி அழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Children floating in the pool p.arents and relatives crying

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது போந்தை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள்கள் 10 வயது கலையரசி, எட்டு வயது ஹேமாவதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவரது மகள் பத்து வயது சுபாஷினி ஆகிய மூவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 5 மற்றும் மூன்றாம் வகுப்புகள் படித்து வந்தனர். வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். அதையடுத்து அவரது மனைவி திலகவதி தனது மகன்களை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திலகவதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை பணி செய்வதற்காக சென்றிருந்தார்.

 

அவர்களது குழந்தைகளும் வயலுக்கு தாயுடன் சென்றிருந்தனர். அறுவடை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு முன் கலையரசி, ஹேமாவதி இருவரும் தங்கள் வயலுக்கு அருகில் இருந்த ஒரு குட்டையில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே அவர்களது பள்ளி தோழிகள் சுபாஷினி, சவுந்தர்யா உட்பட மூன்று சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் சந்தோஷமாகக் குளித்தனர். மற்ற சிறுமிகள் குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பி சென்றுவிட்டனர். ஆனால் ஹேமாவதி, கலையரசி, சுபாஷினி ஆகிய மூவர் மட்டும் நீண்ட நேரம் அந்தக் குட்டையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

 

asdfsdf

 

குளிக்கும் ஆர்வத்தில் குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்ற மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். குளிக்கச் சென்ற சிறுமிகள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது பெற்றோர்கள் மூன்று பிள்ளைகளையும் தேடி அவர்கள் குளிக்கச் சென்ற குட்டைக்குச் சென்று பார்த்தபோது மூன்று சிறுமிகளும் மிதந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மூன்று குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கியதில் மூச்சு திணறி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டதும் மூன்று பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீசார் மற்றும் டிஎஸ்பி பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர் நடராசன் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்து போன மூன்று சிறுமிகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.