Skip to main content

மனைவிக்கு பிரசவம்  பார்த்த கணவன்!  தேனியில் பரபரப்பு!!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
the

 

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியில் இருக்கும் கோடாங்கிபட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன்.  இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவருடைய மனைவி மகாலெட்சுமிக்கு தான் வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

     கர்ப்பிணியாக இருந்து வந்த  கண்ணனின் மனைவி மகாலட்சுமிக்கு நேற்று  இரவு திடீரென  இடுப்பு வலி ஏற்படவே  தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன்.  இந்த விஷயம்  அப்பகுதியில் உள்ள மக்கள் மூலமாக  ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  தெரியவே பதறி போன நர்ஸ் கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குனர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவுக்கும் தகவல் கொடுத்ததின் பேரில் மருத்துவ குழுவே கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டனர்.
 

இதுசம்பந்தமாக  சுகாதாரத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்ட போது.... கண்ணன் தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.    இந்த தகவல் கிடைத்ததின் பேரில்  சம்ப இடத்திற்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க  கண்ணன் மருத்துவ குழுவை அனுமதிக்கவில்லை. நேரம்  போக போக எங்களுடன் கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். அதன் பின் வருவாய்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதை கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போது கூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்த பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாக சத்தம் போட்டார்  என்று  கூறினார்.


 அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சாதாரண விசயமாக இருந்தது. பாட்டி மார்களின் பெரும் வேலையாகவே பிரசவம் பார்ப்பது இருந்தது. கூடவே, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டுவந்தார்கள்.  அதனால் சுகப்பிரசவம் எளிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் சுகப்பிரசவம் என்பதே சரியாக இருக்கும். இப்போது கூட தாய், சேய் இருவருக்குமான அடிப்படை பரிசோதனைகள் கூட செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய், சேய்க்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.
   

   வீட்டிலேயே மருத்துவ குழுவை பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்ட போது,  நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் தானே.  என் மனைவியும் குழந்தையும் ஆரோக்கியமாக தானே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எதற்கு பரிசோதனை செய்ய வேண்டும்  என்று கூறினார். ஆனால்  இச்சம்பவம்  மாவட்டத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுனால  மருத்துவ குழுவும் தொடர்ந்து கண்ணனிடம் பேசி தாயையும், சேயையும் பரிசோதனைக்கு அனுப்ப வலியுறுத்தி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Next Story

பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை; களத்தில் இறங்கிய உ.பி.கள்!!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Minister I. Periyasamy consultation with Theni district party officials

தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் அதிமுக சார்பில் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பிஜேபி கூட்டணி கட்சி சார்பில் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட சில கட்சிகளும் தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள்.

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெரியகுளம், கம்பம்‌, ஆண்டிபட்டி, சோழவந்தான் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றியுள்ளது. போடி, உசிலம்பட்டி  தொகுதிகளை எதிர்க்கட்சியான அதிமுக வசம் உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இத்தொகுதி ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக தான் இருந்து வருகிறது. அது போல் கடந்த தேர்தலில் அதிகாரம் பண பலம் இருந்தும் கூட ஓபிஎஸ் மகன் ஓபிஆர் 5,04,813 ஓட்டு தான் வாங்கினார். ஆனால் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய இ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிகாரம் பண பலம் இல்லாமல் 4,28,120 லட்சம் ஓட்டு வாங்கி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் (76693) தோல்வியை தழுவினார்.

Minister I. Periyasamy consultation with Theni district party officials

ஆனால் தற்பொழுது அதிமுக உடைந்திருப்பதால் அந்த ஓட்டுகளும் சிதற வாய்ப்பு உள்ளது. அது போல் டிடிவிக்கும் இலை ஓட்டுகள் விழுக வாய்ப்பு உள்ளது. அதனால் கடந்த முறை வாங்கிய ஓட்டுகள் வாங்கினாலே தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று விடுவார். அதனால்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தேனி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினோ, இத் தொகுதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது போல் தமிழக அளவில் அதிக ஓட்டுகள்  வாங்க வேண்டும் என்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பேசி விட்டு சென்றிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வனும் தொகுதியில் களமிறங்கி வாக்காள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அது போல் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியும் தொடர்ந்து தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி முழுக்க  ஆய்வு செய்து பொறுப்பில் உள்ள உ.பி.க்களையும் களத்தில் இறக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்திற்கு திடீரென நேற்று  முன் தினம் காலை விசிட் அடித்த அமைச்சர் ஐ.பி. பெரியகுளம்  கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் முக்கையா, உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி கடந்த தேர்தலுடன் கூடுதல் ஓட்டுகள் வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .

Minister I. Periyasamy consultation with Theni district party officials

அதைத் தொடர்ந்து தேனியில்  நகர பொறுப்பில் உள்ள உ.பி.க்களிடமும் தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து போடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் தொகுதி பொறுப்பாளரான மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன்  கட்சி ஆபீஸ்சில் ஆலோசனை செய்து இத்தொகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இருக்கிறார். அதைத்தொடர்ந்து தர்மத்துப்பட்டி,  நரசிங்கபுரம்பாளையத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பி. ஆலோசனை செய்தார் அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக கம்பம் ராமகிருஷ்ணன் வாங்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமியை சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருமான ஸ்டாலின் சொன்னது போல் இந்த தொகுதியில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு எல்லாம் நீங்கள் இரவு பகல் பாராமல் தேர்தல் பணி செய்ய வேண்டும். அப்படி  வேலை பார்த்தால் தான் இத்தொகுதியில் அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியும். பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் தலைவர் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைத் தொகையை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். அதன் மூலம் மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள். அதனால் உடனடியாக தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று உறுதிபடக் கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து உ.பி.களும் தேர்தல் காலத்தில் அதிரடியாக இறங்கி  மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.