Skip to main content

தமிழகத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கு வடமாநிலத்தில் நடந்த கொடூரம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018



இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு வயது பெண் குழந்தைக்கு நடத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது லோனி கள்போர் ரயில் நிலையம். இந்த பகுதியில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தையும் உள்ளது. இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் சாலையோரத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். 

 

 

 

அப்போது நள்ளிரவில், குழந்தையின் தாய் திடீரென முழித்து பார்த்த போது அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள அனைத்து இடங்களில் குழந்தையை தேடி அழைந்துள்ளனர் எங்கும் கிடைக்கவில்லை.  


 

The horrific incident in the North


 

இதன்பின், விரக்தி அடைந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரை ஏற்ற காவல்துறை உடனடியாக குழந்தையை தேடி விசாரணையை மேற்கொண்டது. சம்பவம் நடந்து 4 மணி நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சி‌சி‌டி‌வி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தூங்கிகொண்டிருந்த குழந்தையை கடத்தியவரை உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர் மல்ஹரி பன்சோடே (65) என்பது தெரியவந்தது. 
 

அதன் பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் தலை பயங்கரமாக அடித்து நொறுக்கபட்டு இருப்பதும், கொலை செய்வதற்கு முன்பு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

 

 

 

இதையடுத்து குற்றவாளி பன்சோடே காவல்துறை கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டதில் 4,8(G), 366 (கடத்தல்), 376 (வன்கொடுமை), 302 (கொலை) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.