ராசிபுரம் அருகே, சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா,அவருடைய கணவர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில்சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் நேற்றுஅனுமதி அளித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
குழந்தை விற்பனை தொடர்பாகவாட்ஸ்அப் ஆடியோ வெளியான விவகாரத்தில்முதல்கட்ட விசாரணையில், அமுதா, குழந்தைகளை சட்ட விரோதமாக பெற்றோர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி விற்பனை செய்து வரும் இடைத்தரகர் என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில்செவிலியர் அமுதா,அவருடைய கணவர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நேற்று இந்த வழக்கில் கைது செய்தவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரிநாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் சிபிசிஐடிமனு கொடுதிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்அமுதா உட்பட 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, பர்வீன், ஹசீனா உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.