Skip to main content

சிறுமியைத் திருமணம் செய்த இருவருக்கு 'சிறை'!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Child marriage pocso act


கோவை சரவணம்பட்டி பகுதியில், பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமியை, அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் வசித்து வரும் வெல்டிங் தொழிலாளியான, பழநி என்பவருவருக்குக் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். 

 

இதனைத் தொடர்ந்து, சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சிறுமியின் இன்னொரு உறவினர்  ஒருவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


அவருக்கு உதவியாகச் சிறுமி மருத்துவமனைக்குச் சென்றார். அதே மருத்துவமனையில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரான லாரி ஓட்டுனர் சிவா, விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது சிறுமிக்கும் சிவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இருவரும் தங்களது செல்ஃபோன் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பின்னர், இருவரும் அவ்வப்போது செல்ஃபோனில் பேசியும் நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். 


இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்குத் தெரிந்து, அவர் சிறுமியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்த சிறுமி, அங்கு பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் திடீரென மாயமானார்.


இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்துச் சிறுமியைத் தேடி வந்தனர். 


இந்த நிலையில், சிறுமி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த மச்சூர் பகுதியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். 

 

nkn


சிறுமியைக் கடத்திச் சென்ற லாரி ஓட்டுனர் சிவா, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுமிக்கு 17 வயது என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்துவைத்த அவரது தாய், தந்தை, கணவர் மற்றும் கணவரின் தாய் ஆகியோர் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

சிறுமியைக் கடத்திச் சென்று இரண்டாவது திருமணம் செய்த சிவா மற்றும் சிறுமியின் கணவர் ஆகிய இருவரையும்,  காவல்துறையினர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.