Skip to main content

பஞ்சவர்ண கிளியை திருடியதாக சிறுவனை கடையில் பூட்டி வைத்து சித்திரவதை; நாகை அவலம்

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

நாகையில் சிறுவன் ஒருவன் பஞ்சவர்ண கிளிகளை திருடியதால் ஜவுளி கடைக்குள் வைத்து பூட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சிறுவனை மீட்ட வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Child locked up and tortured for stealing Panchavarna clip in nagai

 

நாகப்பட்டினம் புதுத்தெரு பகுதியை சேர்ந்த தாரிக் என்பவர் தனது வீட்டில் பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவரது வீட்டில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள  பஞ்சவர்ண கிளிகள் திருட்டுப் போய் உள்ளது. இதனை சுதாரித்து கொண்ட தாரிக் மிஞ்சியிருந்த கிளிகள் மீது கவனத்தில் இருந்தார். இந்தநிலையில் நேற்றைய முன்தினம் அவரது வீட்டில் இருந்த கிளிகளை சிறுவர்கள் திருடி தப்பி செல்வதை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரணையில் கிளிகளை திருடி சென்ற சிறுவன் திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பது தெரியவந்தது. 

பின்னர் கிளி உரிமையாளரான தாரிக் மற்றும் அவரது நண்பர் பரக்கத்துல்லா ஆகியோர் திருவாரூர் சென்று சிறுவனை பிடித்து இழுத்துக்கொண்டு நாகை தம்பிதுரை பூங்கா அருகில் உள்ள தனது கடைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது சிறுவனிடம் அவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் சிறுவனை கடையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளனர். இன்று பக்ரீத் என்பதால் சிறுவனை கடைக்குள் வைத்து பூட்டி விட்டு தாரிக்கும், பரக்கத்துல்லாவும் தொழுகைக்காக சென்றுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுவன் கடையினுள் இருந்த பெபிகால் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.  பூட்டிய கடைக்குள் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

 

Child locked up and tortured for stealing Panchavarna clip in nagai

 

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலிசார் கடை உரிமையாளரை வைத்து பூட்டியிருந்த கடையை திறந்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்ட போலிசார் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நாகையில் பஞ்சவர்ண கிளிகள் திருடிய காரணத்திற்காக சிறுவன் கடைக்குள் பூட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Next Story

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
thief who was involved in two-wheeler theft was arrested

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம்  திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக்  கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.