Skip to main content

கோவிலில் நடந்த சோகம்; காவல் நிலையத்தில் உயிரிழந்த பெண் - அதிர வைக்கும் திருப்பங்கள்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Child kidnapped in temple rescued safely

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது மணவாளபுரம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். 40 வயது மதிக்கத்தக்க இவர், தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டிட வேலைகளைச் செய்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவரின் மனைவி ரதி. இந்தத் தம்பதிக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி கோவில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் இந்தத் தம்பதி, குலசேகரப்பட்டினத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் எடுத்துள்ளனர். 

 

பின்னர், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். இந்தக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி, சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அதன்படி, இந்தத் தம்பதியரும் தங்களது குழந்தைகளோடு அங்கேயே தங்கியுள்ளனர். அப்போது, இந்தத் தம்பதி தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தங்கியுள்ளார். முத்துராஜ் குடும்பத்தினரிடம், தான் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவதாகவும், தான் மிகப்பெரிய முத்தாரம்மன் பக்தை எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், முத்துராஜின் குழந்தைகளோடு மிகுந்த பாசத்தோடு பழகி வந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முத்துராஜ் மற்றும் ரதி தம்பதி தங்களது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோவில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். இதனைக் கவனித்த 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும், அவர்கள் சென்ற பிறகு அவர்களை நோட்டமிட்டபடி நின்றுள்ளார்

 

அந்த சமயத்தில், துணி துவைக்க சோப்பு இல்லை எனத் தனது கணவர் முத்துராஜியிடம் ரதி கூறியிருக்கிறார். மனைவி சோப்பு கேட்டதும் உடனே வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, தனது கையில் இருந்த தனது ஒன்றரை வயது குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதுவரை தூரத்தில் நின்றுகொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் நோட்டமிட்ட அந்தப் பெண் அங்கு வந்துள்ளார். அப்போது ரதியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு, விளையாட்டு காட்டியுள்ளார். உடனே ரதியிடம், ஏம்மா... குழந்தை ஐஸ்கிரீம் கேக்குறாம்மா? நான் வாங்கி தரட்டுமா? என அடக்கமாக கேட்டுள்ளார். இதனைக் கேட்ட முத்துராஜியின் மனைவி ரதியும், சரிக்கா... வாங்கி கொடுங்க.. என மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். குழந்தையின் அம்மா அனுமதி கொடுத்தவுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, கொஞ்சியபடி கடைகள் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றுள்ளார். அதன்பிறகு, சிறிது நேரம் கழித்து சோப்பு வாங்கிக்கொண்டு வந்த முத்துராஜ், மனைவி ரதியிடம் குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு ரதியும் அந்த அக்கா தான் தூக்கிட்டு போயிருக்காங்க" எனக் கூறியிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற பெண் திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமான முத்துராஜ் - ரதி தம்பதி கோவில் வளாகம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனால், எங்கேயும் குழந்தை இல்லை. 

 

ஒருகட்டத்தில், அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முத்துராஜ் தம்பதிகள் கூறிய நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சுடிதார் அணிந்துகொண்டு குழந்தையோடு வேகமாக செல்வது பதிவாகியிருந்தது.

 

இதையடுத்து, குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையில் 25 பேர் அடங்கிய 4 தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இத்தகைய சூழலில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டியில் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து, உடனடியாக கோவை ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

பின்னர், டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட ஆலாந்துறை போலீசார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், திலகவதி தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும், கடத்தப்பட்ட குழந்தை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாகக் கூறி உள்ளனர். 

 

இத்தகைய சூழலில், கைது செய்யப்பட்ட தம்பதி ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது, கழிவறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்ற திலகவதி, சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திலகவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். 

 

இதனிடையே, குற்றவாளியான திலகவதி கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பால் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கடத்தப்பட்ட குழந்தை சேலம் ஆத்தூரை அடுத்த தென்னம்பிள்ளையூர் கிராமத்தில், பச்சியம்மாள் என்பவர் வீட்டில் இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீசார் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். ஒருகணம், தங்களுடைய குழந்தையை பார்த்த முத்துராஜ் - ரதி தம்பதி கண்ணீர் விட்டுக் கதறிய நிலையில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த்ராஜ் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தங்களுடைய குழந்தையைப் பெற்றுக்கொண்ட தம்பதி அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது, முத்தாரம்மன் கோவிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.