கிருஷ்ணகிரி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியின் வழியாக நேற்று இரவுகுடியிருப்பு பகுதிக்குள் ஒரு குட்டியானை உட்படமூன்று காட்டுயானைகள் புகுந்தன.இதை அறிந்த பொதுமக்கள் யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தனர் இதனால் மிரண்டு ஓடிய காட்டுயானைகளில் குட்டியானை மட்டும் குழாய் அமைக்க வெட்டப்பட்ட குழியில் விழுந்துமாட்டிக்கொண்டது.
இதை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்த இரண்டு மாதகுட்டியானையை மீட்டு காட்டுக்குள் திருப்பி அனுப்பிவைத்தனர்.