Advertisment

சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்!

புதுவையில் 17வயது சிறுமியை காதலித்து அவளை நண்பர்களுக்கு காதலன் விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நகர பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக அவர் தினமும் பேருந்தில் சென்று வந்துள்ளார். இதில், வழுதாவூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களது நட்பு காதலாக மாறியது.

Advertisment

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அந்த வாலிபர் வழுதாவூரை ஒட்டியுள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தனது செல்போனிலும் அந்த வாலிபர் படம் எடுத்து வைத்துள்ளார். இதன்பின் அந்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதுமட்டுமின்றி அந்த சிறுமியை அருகில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். 6 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Rape Child rape Child abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe