ADVERTISEMENT

பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

03:01 PM Jul 06, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. மக்களின் வாழ்வாதாரம் கடந்த மூன்று மாதங்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT