ADVERTISEMENT
ADVERTISEMENT
அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில், வரும் நவம்பர் 27- ஆம் தேதி, தமிழக முதல்வர் மேற்கொள்ள இருந்த ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 27 -ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக, சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் புயல் காரணமாக இந்த ஆய்வு தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Show comments