Skip to main content

“பூரண மதுவிலக்கு குறித்து கலந்துபேசி முடிவெடுப்பார் முதல்வர்..” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் நம்பிக்கை!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
"The Chief Minister will make a decision on absolute Ban alcoholism." -KD Rajendrapalaji's hope


சிவகாசி மற்றும் திருத்தங்கல்லில் வேன், ஆட்டோ டிரைவர்கள் என 1000  நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  செய்தியாளர்களை சந்தித்தார்.  


“கரோனோ வைரஸ் தாக்குதலிலிருந்து நாட்டு மக்கள் மீட்கப்பட்டனர் என்ற செய்தி வரும் வரை இது போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து  கொண்டே இருப்போம்.  நாட்டில் கரோனா வைரஸ் மக்களை  தாக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா,  ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்திய ராணுவத்தின் பலம் அதிகமாய் இருந்து ஒரு வல்லரசு நாடாக உள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க சுகாதாரத்துறை மூலம் அரசுகள் எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கை மனிதாபிமான முறையில் உள்ளது. டெல்லி,  மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக தவித்து வரும் தமிழர்களை மீட்க அந்தந்த மாநில முதல்வர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி,  மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  

ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையை கூட்டி அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பார்.  பள்ளிப் பாட புத்தங்கள் அச்சடிக்கும் பணி தற்போது சிவகாசியில் நடைபெறுகிறது.  அது தடையில்லாமல் நடைபெற,  சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் முதல்வர் பேசுவார்.  இதுபோக பள்ளிப் புத்தகம் விநியோகம் சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் முடிவு எடுப்பார். மக்களை பாதிக்காத அளவுக்கு என்னென்ன முடிவுகள் எடுக்க முடியுமோ, அந்தப் பணியை தமிழக முதல்வர் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய தொழில் பட்டாசு, பிரிண்டிங்,  தீப்பெட்டி, நெசவு, விவசாயம்  ஆகிய தொழில்கள்தான். அந்தத் தொழில்களைப் பாதுகாக்க அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார்.”  என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.