செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், வண்டலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/11/2021) நேரில் வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு உணவு வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.