கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!

Chief Minister stalin will inaugurate the  kalaignar Centenary Library today

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்குத்திறந்து வைக்க உள்ளார். இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம்ஓய்வெடுத்துவிட்டுப் பின்பு விழா நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார். மாலை கலைஞர் நூலகத்தைத்திறந்து வைக்கும் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில்கலைஞர் நூலகத்திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகம் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

madurai
இதையும் படியுங்கள்
Subscribe