ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அண்ணா சாலையில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலைஞரின் நினைவிடம் அமைந்துள்ள மெரினாவை நோக்கி அமைதிப்பேரணி வந்தனர்.
அமைதிப்பேரணி மெரினா வந்தடைந்ததும் முதல்வர் ஸ்டாலின் கலைஞரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ADVERTISEMENT
Show comments