Skip to main content

“முதல்வர் ஸ்டாலின் இரவு பகல் பாராது உழைத்து வருகிறார்..” - அமைச்சர் கணேசன்

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

"Chief Minister Stalin has been working day and night ..." - Minister Ganesan

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்படாமல் இருந்த தாலிக்கு தங்கம் மற்றும் அதற்கான நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பயன்பெறாதவர்களை கணக்கெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டு காத்திருக்கும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் பயனாளிகள் இந்தத் திட்டத்தின்படி காத்திருந்தனர். இவர்களுக்கு தாலிக்கு தங்கம் நிதியுதவி கிடைப்பதற்கு மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் ஆகியோர் உயர்மட்ட அதிகாரிகளிடம் திட்ட உதவி கிடைக்குமாறு அறிவுறுத்தினர். 

 

அதனடிப்படையில் மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் பாதுகாப்புத் துறை அலுவலர் சித்ரா, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் உள்ள சமூக நல அலுவலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் புள்ளி விபரங்களை சேகரித்து அதற்கான நிதியை பெற்றுத் தரும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக பயனாளிகளுக்கு கடந்த 25ஆம் தேதி குறிஞ்சிப்பாடி, குமராட்சி பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைகளால் வழங்க ஏற்பாடு செய்தார். 


இதேபோன்று மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மங்களூர், நல்லூர், விருத்தாசலம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நேற்று 30ஆம் தேதி அன்று திட்டக்குடி தனியார் திருமண மண்டபத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக நலத்துறை சார்பில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்க, சமூக நல அலுவலர் சித்ரா முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. கணேசன் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினார். அதேபோன்று விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை பெறுவதற்கான சான்றுகளையும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அடமானம் வைத்த 5 பவுன் நகை கடனை அரசு தள்ளுபடி செய்தது அந்த நகைகளையும் விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கினார். ஆதரவற்ற ஏழை விதவை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் என 1058 பயனாளிகளுக்கு சுமார் 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். மேலும் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்கள் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் நிர்வகிக்கிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்கிறார்கள். குடும்பத் தலைவியாக இருப்பவர்கள் உறவினர்களின் குடும்பங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று கலந்து கொள்கிறார்கள். இப்படி அதிக பணிச்சுமை பெண்களுக்கு உள்ளது. அதை குறைக்கும் வகையில் அவர்கள் பயணம் செய்யும் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து அது நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்காக அவர்கள் அடமானம் வைத்த 5 சவரன் நகைக்கான பணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அடமானம் வைத்த நகைகளை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆண் பெண் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு தனியார் நிறுவனங்களை வரவழைத்து அவர்கள் மூலம் ஆண் பெண் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஆண் பெண் இரு தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து வருகின்றன. 


செங்கல்பட்டில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதில் 8552 பேருக்கு வேலைக்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர், இதேபோன்று மாவட்டம் தோறும் முகாம்களை நடத்தி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி விரைவில் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார். 


நிகழ்ச்சியில் திட்டக்குடி வட்டாட்சியர் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.